மதுரையில் போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

8 months ago 21

சென்னை: மதுரையில் போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர், நிவாரணப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்புநிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை. குடியிருப்பு பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற மின் மோட்டார்களுடன் பொறியாளர்கள், பணியாளர்கள் அனுப்பி வைப்பு. மழையால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 20 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என முதலமைச்சர் தெரிவித்தார்.

The post மதுரையில் போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article