மதுரையில் நாளை தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: முகக்கவசம் அணிய அறிவுரை

1 day ago 4


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்படி கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை பகுதிக்கு வருகை தந்தார். அங்கிருந்து முதல்-அமைச்சர் பங்கேற்கும் பிரமாண்டமான ரோடு ஷோ சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கட்சிக்கொடிகளை ஏந்தியபடி திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்,

இந்த சூழலில் நாளை (1-ந் தேதி) நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது குறித்து பல்வேறு அமைச்சர்கள் நேரில் வந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி தி.மு.க. கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை என்றும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும், பாதுகாப்புக்காக முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Read Entire Article