மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!

1 hour ago 3

மதுரை: மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இத்தகைய தகவலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிகளில் மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் குறிப்பாக வாகனங்கள், சுற்றுவட்டார பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையை நடத்தினர். வெடிகுண்டு காவல்துறையினர் நடத்திய சோதனையில் பள்ளிகளில் எந்த ஒரு வெடிகுண்டும் இல்லை வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டறியப்பட்டது.

The post மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article