மதுரையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் தகவல்

2 months ago 10

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரையில் ஒலிம்பிக் அகாடமி அமைகிறது. இதற்காக மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில், ₹6 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: எல்லா வகையிலும் மதுரை சிறப்பாக இருந்தாலும், விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்ேவறு நிகழ்வுகளை மதுரையில் நடத்திக்கொண்டிருக்கிறார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிக்கிற உலக அளவிலான ஒலிம்பிக் போட்டியைக் கூட மதுரையில் நடத்தலாமா என்பது குறித்து துணை முதல்வர் ஆலோசித்து வருகிறார். அதைப்போல பல்வேறு விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

The post மதுரையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article