மதுரையில் 38 மாநகராட்சி பள்ளி மாணவர்களை நூலகத்துடன் இணைக்கும் திட்டம் தொடக்கம்

16 hours ago 5

மதுரை: மாணவர்களிடம் பள்ளி பருவத்திலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதோடு கல்வி, இலக்கியத்தை தூண்டும் வகையில் மதுரை கலைஞர் நூலகத்தின் அனைத்து வகை புத்தகங்களை 38 மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் படிக்கும் வகையில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மதுரை புது நத்தம் சாலையில் தமிழக அரசு பிரம்மாண்டமான கலைஞர் நூலகத்தை கட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பொதுமக்கள், மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நூலகத்தை, இதுவரை 18 லட்சத்து 50 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

Read Entire Article