
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டி ஊராட்சி சக்கிலியான்கொடை கிராமத்தில் மதுரைவீரன் சுவாமி, வேட்டைக்காரன் சுவாமி, ஆண்டிச்சாமி மற்றும் ஏழு கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
இதையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து மதுரைவீரன் சுவாமி, வேட்டைக்காரன் சுவாமி, ஆண்டிச்சாமி ஏழுகன்னிமார் சுவாமிகள் மற்றும் மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்ந்தன. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.