மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு 12,632 காளைகள் 5347 காளையர் ரெடி: ஆன்லைன் முன்பதிவு நிறைவு

4 months ago 13

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 14ல் அவனியாபுரம், ஜன. 15ல் பாலமேடு, ஜன. 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் பங்கேற்பதற்கான காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது.

கடந்த 24 மணி நேரத்தில், இ-சேவை மையங்கள் மற்றும் கணினி முன்பதிவு மையங்களில் முன்பதிவு தீவிரமாக நடந்தது. அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானது என்பதால், முன்பதிவு செய்வதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலரும் ஆர்வம் காட்டினர்.

நேற்று மாலை 5 மணியுடன் முன்பதிவு முடிந்த நிலையில், 12,632 காளைகளுக்கும், 5,347 மாடுபிடி வீரர்களும் களம் காண முன்பதிவு செய்துள்ளனர். 3 இடங்களுக்கும் காளைகளை முன்பதிவு செய்திருந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே ஒரு காளைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் அதிகப்படியான காளைகள் களம் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

* அவனியாபுரம் 2,026 காளைகள் 1,735 வீரர்கள்
* பாலமேடு 4,820 காளைகள் 1,914 வீரர்கள்
* அலங்காநல்லூர் 5,786 காளைகள் 1,698 வீரர்கள்

The post மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு 12,632 காளைகள் 5347 காளையர் ரெடி: ஆன்லைன் முன்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article