மதுரை கலைஞர் நூற்றாண்டு அரங்கில் 2-வது நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

3 hours ago 1

மதுரை: மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரங்கில் 2வது நாளாக இன்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இரண்டாம் நாளான இன்று (பிப்.12) காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. போட்டியை அமைச்சர் பி மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் காளைகள் களமிறக்கப்பட்டன. மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, கிழக்கு தெற்கு , கிழக்கு வடக்கு மற்றும் வண்டியூர் பகுதிகளை சேர்ந்த 1000 காளைகள், 500 வீரர்கள் இன்று களம் காண்கின்றனர்.

Read Entire Article