மதுரை எஸ்.எஸ்.காலனியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

1 month ago 5

மதுரை பிப். 10: மதுரையில் உள்ள வீட்டிலிருந்து அழுகிய நிலையில் ஆணின் உடலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். மதுரை எஸ்.எஸ்.காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(51). இவர் மனைவி முத்துமாரி(46). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து முத்துமாரி விநாயகமூர்த்தியை பிரிந்து குழந்தைகளுடன் மடப்புரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் விநாயகமூர்த்தி எஸ்.எஸ்.காலனி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் விநாயகமூர்த்தி இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த முத்துமாரி எஸ்.எஸ்.காலனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விநாயக மூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை எஸ்.எஸ்.காலனியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article