மதுரை ஆதீனத்துக்கு தம்பிரான்கள் நியமிக்க கோரி தருமபுரம் ஆதீனத்துக்கு இந்து மக்கள் கட்சி கடிதம்

5 hours ago 2

மதுரை: மதுரை ஆதீன மடத்துக்கு தம்பிரான்களை நியமனம் செய்யக் கோரி தருமபுரம் ஆதீனத்துக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த சுவாமிகளுக்கு, மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீன கர்த்தராக ஹரிஹர ஞான சம்பந்த தேசிகர் இருந்து வருகிறார். அவரை ஒரு சிலர் கைப்பாவையாக பயன்படுத்தி ஆதீன மடத்தின் முதன்மை நோக்கமான சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியை தடை செய்து வருகின்றனர்.

Read Entire Article