மதுரையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் நீதித்துறையை விமர்சனம் செய்ததற்காக மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
கடந்த ஞாயிறு (மார்ச் 9) அன்று மதுரை கே.கே.நகரில் உள்ள கிருஷணய்யர் அரங்கில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க மாநாட்டு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதிமுக பொருளாளர் செந்தில் அதிபர், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுப.உதயகுமார், எஸ்டிபிஐ தலைவர் முபாரக், முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உட்பட பலர் பேசினர்.