குளச்சல், பிப்.17: மண்டைக்காடு அருகே பரபற்று பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (80). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சுப்பிரமணியன் தனது மகன் கிருஷ்ணபால் (38) வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சுப்பிரமணியன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மண்டைக்காடு போலீசார் சுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணபால் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மண்டைக்காடு அருகே முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.