மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணையதள சேவை துண்டிப்பு

3 hours ago 2

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி - குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்-மந்திரி பைரன் சிங் பதவி விலகினார். இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.

இந்நிலையில், மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

இதை எதிர்த்து மெய்தி மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனால், மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று இரவு 11.45 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article