மணிப்பூரில் பாஜவுக்கான ஆதரவை திரும்ப பெற்ற நிதிஷ்: அரசியல் மாற்ற முன்னறிவிப்பா? காங். விமர்சனம்

5 months ago 15

புதுடெல்லி: மணிப்பூரில் பாஜ தலைமையிலான ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக பைரன் சிங் இருந்து வருகின்றார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச்சில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்எல்ஏக்கள் வெற்றிபெற்றனர்.ஒரு சில மாதங்களில் 5 எம்எல்ஏக்கள் பாஜவிற்கு தாவிவிட்டனர். ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே இருந்து வருகின்றார். இந்நிலையில் மாநிலத்தில் பாஜ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் நேற்று திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். நிதிஷ்குமாருக்கு ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே இருப்பதால் அவர் ஆதரவை திரும்ப பெறுவதால் பாஜ அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில்,‘‘மணிப்பூரில் பாஜ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் இன்று(நேற்று) திரும்ப பெற்றது. நேற்று அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உயர்மட்ட நியமனங்களை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி அரசு அறிவித்த புதிய யூஜிசி விதிகளை ஐக்கிய ஜனதா தளம் எதிர்த்தது. இது அரசியல் மாற்றத்தின் முன்னறிவிப்பா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The post மணிப்பூரில் பாஜவுக்கான ஆதரவை திரும்ப பெற்ற நிதிஷ்: அரசியல் மாற்ற முன்னறிவிப்பா? காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article