‘மங்காத்தா’ ஆடிய 5 பெண்கள் கைது

4 months ago 14

பெரம்பூர்: வியாசர்பாடி டிடி பிளாக் குடிசைப் பகுதியில் பணம் வைத்து பெண்கள் சிலர் சூதாடுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை 3 மணி அளவில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த 5 பெண்களை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 5 பெண்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடி தாமோதரன் நகர் பகுதியை சேர்ந்த பிரியா (30), வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (50), சூளை பகுதியைச் சேர்ந்த நவநீதம் (60), கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த அன்பழகி (35), புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த வினோதினி (31) என்பது தெரிய வந்தது. இவர்களில் பிரியா என்பவரது வீட்டில் மற்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மங்காத்தா எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டதும், ஒவ்வொருவரும் தனித்தனியாக இதற்காக பணத்தைக் கொண்டு வந்து விளையாடியதும் தெரிய வந்தது. மொத்தம் 5 பேரிடம் இருந்து மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ‘மங்காத்தா’ ஆடிய 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article