
சென்னை,
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள மக்கள் மருந்தகத்திற்கு இரவு நேரத்தில் பைக்கில் மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் பூட்டப்படிருந்த மக்கள் மருந்தகத்தின் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரம் பணத்தை திருடி உள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்த மளிகைக் கடையையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.