மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்: ஓபிஎஸ்

4 months ago 19

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முழு மரியாதை அளித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றித் தர அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டுமென்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின்மீது சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதற்கென தனி அரசாணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இந்த ஆணை உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

Read Entire Article