மக்கள் நலனுக்கு பிரார்த்தனை

4 months ago 26

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் மவுத்தம்பேடு அறுவடை சுவிசேஷ திருச்சபையில், மீஞ்சூரில் உள்ள பிரபல இந்திய கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் சார்பில் தேச நலனுக்காகவும், தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றி மக்கள் அனைவரின் பாதுகாப்புக்காகவும் நேற்று முன்தினம் மாலை பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இந்திய கிறிஸ்தவ வாலிபர் சங்க தலைவர் குரு சாலமோன் தலைமை தாங்கினார். பாஸ்டர் ஸ்டீபன், ஜேம்ஸ், எட்வின், ஜான்பால், ராம்டேனியல் முன்னிலை வகித்தனர். ஆண்ட்ரூஸ் வரவேற்றார். கூட்டத்தில், வாலிபர்களை நல்வழிப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு போதை இல்லா வாழ்க்கை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

The post மக்கள் நலனுக்கு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Read Entire Article