மக்கள் குறை தீர் கூட்டம்: மக்கள் வருகை குறைவு

2 months ago 11

கரூர், நவ. 5: மழையின் காரணமாக கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு குறைவாகவே மக்கள் வருகை இருந்தது. வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து மனு அளிக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையின் 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, அதிகளவு குறைதீர் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வந்து சென்றனர்.

இந்நிலையில், கடந்த 2 வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. மேலும், அக்டோபர் 31ம்தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு, தொடர் விடுமுறை விடப்பட்டு நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மேலும், காலை முதல் மாலை வரை மழை வருவதற்கான அறிகுறியுடன் வானம் காணப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் நேற்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்திற்கு மக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. கலெக்டர் அலுவலகம் மக்கள் வரத்தின்றி வெறிச்சோடியே காணப்பட்டது.

The post மக்கள் குறை தீர் கூட்டம்: மக்கள் வருகை குறைவு appeared first on Dinakaran.

Read Entire Article