மக்களை அச்சுறுத்தும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 4 பேரிடம் பல லட்சம் ‘அபேஸ்’

2 days ago 6

சிவகங்கை, ஜூன் 6: பங்கு மார்க்கெட், டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டதாக கூறி பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பல லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தேவகோட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் (69). கேரளா அரசில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவரது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட நபர் தான் பங்கு மார்க்கெட் ஆலோசகர், தான் கூறும் பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய லட்சுமணன் அவர் கூறியபடி 6 வங்கி கணக்குகளில் பல தவணைகளில் ரூ.12 லட்சத்து 5 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அந்த அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன் இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மானாமதுரையை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் ஆல்பர்ட் சூசைமாணிக்கம் (38). கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு பேசிய நபர் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய ஆல்பர்ட் சூசை மாணிக்கம் அந்த நபர் கூறியபடி 2021ம் ஆண்டு ஜனவரி முதல் 2024ம் ஆண்டு வரை 5 வங்கி கணக்குகளில் 27 தவணைகளில் ரூ.27 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அந்த அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன் இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிபிஐ டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறி சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காரைக்குடியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (59). கடந்த ஏப்ரலில் இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் தான் சிபிஐ அதிகாரி எனவும் ரமேஷ்பாபுவின் பெயரை பயன்படுத்தி தவறான செயல்கள் செய்யப்பட்டுள்ளதால் அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறியுள்ளார். சிபிஐ மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் செலுத்த வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பிய ரமேஷ்பாபு அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ்பாபு புகாரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தேவகோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (33), கோவையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஏப்ரலில் வாட்ஸ் அப் மூலம் இவரை தொடர்பு கொண்ட நபர் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் அதற்கு தான் உதவுவதாக கூறியுள்ளார். இதை நம்பிய பிரகாஷ் பல்வேறு தவணைகளில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்தை அந்த நபரின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து பிரகாஷ் புகாரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மக்களை அச்சுறுத்தும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 4 பேரிடம் பல லட்சம் ‘அபேஸ்’ appeared first on Dinakaran.

Read Entire Article