மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

5 months ago 38

சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸார் கடந்த செப்.7-ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. எனது பேச்சு அவர்களை புண்படுத்தும் வகையி்ல் இருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். எனது பேச்சு எடிட் செய்து யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

Read Entire Article