மகாராஷ்டிரா பேரவை தேர்தல் பாரமதி தொகுதியில் அஜித் பவாரை எதிர்த்து சரத் பவார் பேரன் மனுதாக்கல்

3 months ago 12

புனே: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில்,தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநில துணை முதல்வருமான அஜித் பவார் புனே மாவட்டத்தில் உள்ள பாரமதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பாஜ கூட்டணியில் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திரபவார்) சார்பில் சரத் பவாரின் பேரன் யுகேந்திர பவார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அஜித் பவாரின் சகோதரர் மகன் ஆவார். தற்போது யுகேந்திரா தனது பெரியப்பாவை எதிர்த்து களமிறங்கியுள்ளார். இந்நிலையில் யுகேந்திர பவார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சரத் பவார்,பாரமதி எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் சென்றிருந்தனர்.

The post மகாராஷ்டிரா பேரவை தேர்தல் பாரமதி தொகுதியில் அஜித் பவாரை எதிர்த்து சரத் பவார் பேரன் மனுதாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article