மகள் மாயம்: தாய் புகார்

2 months ago 10

 

ஈரோடு, நவ. 18: ஈரோடு மாவட்டம் அந்தியூர் கண்ணப்பன் கிணறு வீதியை சேர்ந்த காளிதாஸ் மகள் கோகிலவாணி (19). இவர், 12ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கோகிலவாணி கடந்த 15ம் தேதி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கம், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கோகிலவாணி கிடைக்கவில்லை. இதுகுறித்து கோகிலவாணியின் அம்மா ஈஸ்வரி அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கோகிலவாணியை தேடி வருகின்றனர்.

The post மகள் மாயம்: தாய் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article