சின்னசேலம், பிப். 17: சின்னசேலத்தில் வழக்கறிஞர் சங்க செயலாளர் புகாரின் பேரில் போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (38). தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து விட்டதாக கூறி உள்ளார்.
அவரிடம் வழக்கறிஞர்கள் அடையாள அட்டை கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க செயலாளர் பழனிவேல், தன்னை வழக்கறிஞர் என கூறிக்கொண்டு துரை மோசடி செய்ததாக சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், போலி வழக்கறிஞர் துரை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
The post போலி வழக்கறிஞர் கைது appeared first on Dinakaran.