போலி தமிழ்ப்​பற்று நாடக​மாடி, பிரி​வினையை தூண்​டு​ம் திமுக: அண்ணாமலை விமர்சனம்

8 hours ago 2

சென்னை: சம்ஸ்கிருத நிதி ஒதுக்கீடு குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு சம்ஸ்கிருதம் மற்றும் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான ஊடக செய்தியை சுட்டிக்காட்டி, போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சம்ஸ்கிருதத்துக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சி மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம். திமுகவின் தொடர்ச்சியான இந்துமத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

Read Entire Article