போர் பதற்றம் : நாளை மறுநாள் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு என தகவல்

3 weeks ago 7

புதுடெல்லி,

பஹல்காம் தாக்குதலையைடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் மாநில உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. தாக்குதல் நடந்தால் தீ அணைப்புத்துறை, பேரிடர் மீட்பு துறை உள்ளிட்டவற்றை எப்படி செயல்பட வேண்டும் என்பது ஒத்திகையில் இடம் பெறும்.  உணவு , மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. 

சிவில், பாதுகாப்பு நெறிமுறைகள்  குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை செயல்படுத்துதல் தொடர்பாகவும் ஒத்திகை நடத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Read Entire Article