சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில் போர் நினைவுச் சின்னத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை, காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல், தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் கரன்பீர் சிங்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.