
கீவ்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 185வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் - ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் 15ம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதேவேளை, பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள போர் கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தன.
இந்நிலையில், உக்ரைனும், ரஷியாவும் தங்கள் வசம் உள்ள போர் கைதிகளை இன்று பரிமாற்றம் செய்துகொண்டன. அதன்படி, 307 உக்ரைனிய போர் கைதிகளை ரஷியா விடுதலை செய்தது. அதற்கு ஈடாக 307 ரஷிய போர் கைதிகளை உக்ரைன் விடுதலை செய்தது.