போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் கல்லூரி விடுதி காப்பாளரின் இடைநீக்கத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

5 months ago 30

சென்னை: சக ஆசிரியர்களின் பணி நீக்கத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி காப்பாளரின் பணியிடை நீக்க உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை மாவட்டம் மாடக்குளத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் காப்பாளராக பணியாற்றும் சங்கர சபாபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 1999-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு பதவி உயர்வில் விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டேன். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர்கள் மற்றும் வார்டன்கள் வளர்ச்சி சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறேன்.

Read Entire Article