போனஸ் விவகாரம்: அரசு தலையிட என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

4 months ago 14

கடலூர்: கடலூரில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று குடும்பத்துடன் பேரணியாகச் சென்று என்எல்சி நிர்வாகத்திடம் கேட்கப்படும் 20 சதவீத போனஸ் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 19 மாதங்களாக 15 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை நிறுத்த அறிவிப்புக் கூட்டம் நெய்வேலி மெயில் பஜார் காமராஜர் சிலை அருகில் நடந்தது. என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

Read Entire Article