போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா, ‘சப்ளையர்' கெவின் கைது: செல்போன் ஆய்வில் ரகசிய குறியீடு பயன்படுத்தியது அம்பலம்

4 hours ago 1

சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா மற்றும் ‘சப்ளையர்’ கெவின் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு ‘கொகைன்’ போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

மேலும், ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணா என்ற கிருஷ்ண குமார் ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், அவர் மேலும் சிலருக்கு கைமாற்றியதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவை நேரில் ஆஜராகும்படி, போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இல்லாமல் தலைமறைவானார்.

Read Entire Article