“பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அதிமுக நிற்கவில்லை” - கனிமொழி எம்.பி

2 days ago 4

திருநெல்வேலி: "பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அன்றைய அதிமுக அரசு நிற்கவில்லை.எடப்பாடி பழனிசாமி மீது நம்பகத்தன்மை இல்லாதநிலை ஏற்பட்டதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசும்போது, “வரும் சட்டப் பேரவை தேர்தல் களநிலவரம் குறித்து தெரிந்து கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்கு கள நிலவரம் தேவைப்படுகிறது.

Read Entire Article