சென்னை: பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மொத்த நிவாரணத் தொகையாக ரூ.85 லட்சம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நியாயத்துக்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. பெண்கள் தைரியமாக புகாரளித்து, விசாரணைக்கு வந்ததால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது. குற்றச்செயலில் ஈடுபட முனைவோருக்கு பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு கடும் எச்சரிக்கையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
The post பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.