
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த கோவை மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதி நந்தினி தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுள்ளார். வழக்கில் 31-ம் தேதி தீர்ப்பு வழங்கிய பின்னரே நந்தினி தேவி கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார் என கூறப்படுகிறது.
* பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலம், சோலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* அரசு சொத்தாட்சியர் லிங்கேசன் மயிலாடுமுறை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.