பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த ஐகோர்ட் மறுப்பு

6 months ago 41

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

தமிழக சிலை கடத்தல் பிரிவின் ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.அப்போது, நான்கு வாரம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அவருக்கு நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Read Entire Article