சென்னை: பொது கட்டிட உரிமம், கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த சான்றிதழ் மற்றும் சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்ட நியமனம் பெற்ற பொறியாளர்கள் ஆகியவற்றிற்கான செயல்முறைகள் தமிழ்நாடு பொது கட்டிடங்கள் (உரிமம்) சட்டம், 1965 மற்றும் தமிழ்நாடு பொது கட்டிடங்கள் (உரிமம்) விதிகள், 1966 ஆகியவற்றில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பொது கட்டிடம் உரிமம் பெறுவதற்கு பொதுப்பணித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற பொறியாளரால் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து சான்று அளிக்கப்பட வேண்டும். இந்த சேவைகளை https://www.tnesevai.tn.gov.in/ வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை:
* இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், பொது கட்டிடங்களுக்கான உரிமத்தினை இணையவழியாக பெற்றுக்கொள்ளலாம்.
* மேற்படி, கட்டிட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் வரை அக்கட்டிடத்தின் பொது கட்டிட உரிமம் செல்லுபடியாகும்.
* ஏற்கனவே விண்ணப்பித்து நிலுவையில் இருந்தால், இ-சேவை இணையதளம் வழியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
* பொது கட்டிடங்களுக்கான உரிமத்தின் காலம் முடியும் தருவாயில் இருந்தால் இ-சேவை இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.
The post பொது கட்டிடங்களுக்கான உரிமம் வழங்கும் நடைமுறை எளிமையாக்கம் appeared first on Dinakaran.