பொது இடங்களுக்கு பதிலாக கட்சி கொடி கம்பங்களை வீடுகளில் வைக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை

4 months ago 14

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களால் பிரச்சினை வருவதால் அவற்றை பொது இடங்களில் வைக்காமல் வீடுகளில் வைத்துக் கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

மதுரை கூடல்புதூர் பகுதியில் ஏற்கெனவே உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் நடவும், அதில் கொடியேற்றவும் அனுமதி வழங்க விளாங்குடி அதிமுக நிர்வாகி சித்தன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதேபோல் மதுரை பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி மாடக்குளம் அதிமுக பிரதிநிதி கதிரவன் மனு தாக்கல் செய்திருந்தார்.

Read Entire Article