பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

5 months ago 14

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம், 2 கோடியே 20 லட்சத்து 94,585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் தலைமையில் ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்காக டோக்கன்களை கடந்த 3ம் தேதி முதல் ஊழியர்கள் வீடுவீடாக சென்று விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. .அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள (கடை எண் : 11) நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.தற்போது வரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்களை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சிலர் வெளியூர்களுக்கு சென்று இருப்பதால் அவர்களுக்கு வழங்க வேண்டிய டோக்கன்களை அந்தந்த ரேஷன் கடை மூலமாகவும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 13ம் தேதி வரை பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் டோக்கன்களில் உள்ள தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம்.

The post பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Read Entire Article