பொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

4 months ago 17

சென்னை: பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாட சொந்த ஊருக்கு பயணிக்கும் வகையில் 44,580 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுவதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி பயணிக்க 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் இந்த பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Read Entire Article