பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை தண்டனை பெற்ற 9 பேரும் சேலம் சிறையில் தூக்கமின்றி தவிப்பு: கைதிகளுக்கான வெள்ளை சீருடை அணிந்தனர்

2 hours ago 3

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்ற 9 பேருக்கும் தண்டனை கைதிகளுக்கான வெள்ளை சீருடை வழங்கப்பட்டது. கைதி எண்ணும் வழங்கப்பட்டு, தனித்தனி அறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் தூக்கமின்றி தவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றுமுன்தினம் இரவு 8.20 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டதில் இருந்து சேலம் மத்திய சிறையில் உயர்பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தண்டனை பெற்று இரவு நேரத்தில் சிறைக்கு வந்ததால் அதே அறையில் அடைக்கப்பட்டனர். இரவு முழுவதும் அவர்கள் தூக்கமின்றி தவித்தனர். வழக்கமாக ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனைக்கான வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை வழங்கப்படும். அதன்படி 9 பேருக்கும் வெள்ளை பேண்ட், சட்டை கொடுக்கப்பட்டது. சிறையில் ஏற்கனவே தண்டனை உடைகள் தயாராக இருந்தது. விலைஉயர்ந்த உடைகளை அணிந்திருந்த அவர்கள் வெள்ளை பேண்ட் சட்டையை போட்டுக்கொண்டனர். மேலும் அவர்களுக்காக கைதி எண்ணும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தண்டனை பெற்று சிறைக்கு வரும் கைதிகளுக்கு வெள்ளை பேண்ட், வெள்ளை அரைடவுசர், வெள்ளை சட்டை தைத்து தயாராக இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு நகல் வந்தவுடன் அவர்களுக்கான உடையை கொடுப்போம். அதன்படி 9 பேருக்கும் தண்டனை சீருடை வழங்கப்பட்டது. இதுவரை இவர்கள் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று அவர்கள் தனித்தனி அறைக்கு மாற்றப்பட்டனர்,’’ என்றனர்.

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை தண்டனை பெற்ற 9 பேரும் சேலம் சிறையில் தூக்கமின்றி தவிப்பு: கைதிகளுக்கான வெள்ளை சீருடை அணிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article