பெற்றோர் சண்டையால் விரக்தி: மெரினா கடலில் குதித்த மகள்களை மீட்டது போலீஸ்

1 month ago 10

சென்னை: பெற்றோர் தங்களுக்குள் சண்டையிட்டு, விவாகரத்து முடிவுக்கு வந்ததால் மனமுடைந்த இரு மகள்கள் மெரினா கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் தொழில் அதிபர் ஒருவர் மனைவி, இரு மகள்களுடன் வசிக்கிறார். மனைவி வீட்டிலேயே இருக்கும் நிலையில், திருமணமாகாத 23 வயதுடைய மூத்த மகள் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். 20 வயதுடைய 2-வது மகள் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், திருமணமான நாளிலிருந்து தொழில் அதிபரும் அவரது மனைவியும் அடிக்கடி குடும்ப விவகாரம் தொடர்பாக சண்டையிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. குழந்தைகள் பெரியவர்களான பின்பும் இந்த குடும்ப சண்டை நீடித்துள்ளது.

Read Entire Article