பெரம்பலூர் மாவட்டம் | ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட பொது சுகாதார கட்டிடத்தை திறந்து வைத்தார் மா.சுப்பிரமணியன்

4 months ago 10

சென்னை: பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார அலகு புதிய கட்டிடத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 150 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டிடம் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

Read Entire Article