பெரம்பலூரில் வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

2 months ago 13

பெரம்பலூர்,டிச.19: பெரம்பலூர் நகராட்சியில் உள்ள எடத்தெரு  மாரியம்மன் திருக் கோவிலில், தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்துவரும்  வல்லப விநாயகருக்கு நேற்று(18ஆம்தேதி) இரவு 7:30 மணியளவில் மார்கழி மாத சங்கட சதுர்த்தியையொட்டி பால்,தயிர்,சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் திரளான பெரம்பலூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை குமார் மற்றும் ராஜேஷ் பூசாரிகள் செய்திருந்தனர். ஏற்பாடுகளை, காரியக்காரர் பழனியப்பன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post பெரம்பலூரில் வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article