பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில், சட்ட விரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். காட்டாற்றின் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஒயரை இணைத்து, தண்ணீரில் போட்டு மீன் பிடிக்கும் போது விபத்து நடந்துள்ளது. இப்பகுதியில் இதுபோல சட்ட விரோதமாக சிலர் மீன் பிடிப்பதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
The post பெரம்பலூரில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.