பெரம்பலூரில் 10 மையங்களில் நடந்தது 1801 பேர் ஊரக திறனறி தேர்வு எழுதினர்

4 months ago 12

பெரம்பலூர், பிப்.10: பெரம்பலூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான தமிழ் நாடு ஊரகத் திறனறித் தேர்வு 10 மையங்களில் நடைபெற்றது. 1801 பேர் தேர்வெழுதினர். இதில் 95 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வை சிஇஓ, டிஇஓ நேரில் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கான தமிழ் நாடு ஊரகத் திறனறித் தேர்வு பெரம்பலூர் மாவட்ட அளவில் 10 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 265 மாணவமாணவியரும், பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 165 மாணவ மாணவியரும், பெரம்பலூர் தந்தை ஹேண்ஸ் ரோவர் மேல் நிலைப் பள்ளியில் 111 மாணவ மாணவியரும், வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப் பள்ளியில் 224 மாணவ மாணவியரும், அரும்பாவூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 182 மாணவ, மாணவியரும், பாடாலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 137 மாணவ, மாணவியரும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 152 மாணவ மாணவியரும், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 271 மாணவ, மாணவியரும், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 101 மாணவ மாணவியரும், லெப்பை குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 288 மாணவ,மாணவியரும் என பெரம்பலூர் மாவட்ட அளவில் 10 மையங்களில் 807 மாணவர்களும், 1089 மாணவிகளும் என மொத்தம் 1896 மாணவ மாணவியரும் இந்த தமிழ் நாடு ஊரக திறனறித் தேர் வினை எழுத அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

இந்த தேர்வுக்கு 749 மாணவர்களும், 1052 மாணவிகளும் என மொத்தம் 1801 மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேர்வுஎழுதினர். 58 மாணவர்கள், 37 மாணவிகள் என மொத்தம் 95 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள், பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) செல்வகுமார், பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத்ராய் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த தேர்வில் மாவட்ட அளவில் 50 மாணவர்களும், 50மாணவிகளும் 100பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அவர்கள் பள்ளி படிப்பை முடிக்கும் வரை 9,10,11,12 வகுப்புகள் பயிலும் போது ஆண்டுக்கு ரூபாய் 1000 என 4000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சா.சி.சிவசங்கர், எம்பி ஆ.ராசா திறந்து வைத்தனர்

The post பெரம்பலூரில் 10 மையங்களில் நடந்தது 1801 பேர் ஊரக திறனறி தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.

Read Entire Article