பெண்ணை கத்தியால் வெட்டிய 3 பேருக்கு போலீஸ் வலை ஆரணி அருகே வழித்தகராறு

5 months ago 17

ஆரணி, ஜன. 23: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, விவசாயி. இவரது, மனைவி மகேஸ்வரி(25), அதேபகுதியை சேரந்த விவசாயி சரவணன், இருவருக்கும் வீட்டிற்கு செல்லும் வழிபாதை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், மகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டின் வழியாக சரவணன் ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, மகேஸ்வரி எதற்காக எங்கள் வீட்டின் வழியாக ஆடுகளை ஓட்டிச் செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால், இருவருக்குக் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், மகேஸ்வரி அவரது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த சரவணன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த அவரது உறவினர்களான பத்மா, கன்னியப்பன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மகேஸ்வரியை மீண்டும் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை, மகேஸ்வரி தட்டிகேட்டுள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த சரவணன் திடீரென மகேஸ்வரியின் தலை மூடியை பிடித்து கீழே தள்ளி தாக்கியுள்ளார். பின்னர், அவர் வைத்திருந்த கத்தியால் மகேஸ்வரியின் கையில் வெட்டியுள்ளார். மேலும், அங்கிருந்த சரவணனின் உறவினர்கள் கன்னியப்பன், பத்மா ஆகிய இருவரும் சேர்ந்து கட்டையால் சரமாரியாக அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து 3 பேரும் தப்பியோடினர். இதில், படுகாயம் அடைந்து மயங்கி கிடந்த மகேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து, மகேஸ்வரி ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சரவணன், கன்னியப்பன், பத்மா ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பெண்ணை கத்தியால் வெட்டிய 3 பேருக்கு போலீஸ் வலை ஆரணி அருகே வழித்தகராறு appeared first on Dinakaran.

Read Entire Article