சென்னை: பெண்களை மதிக்கவும், அவர்களுக்கு சம உரிமை வழங்கவும் வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் ஆகியவை சார்பில், ‘கண்ணியமும் நியாமும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி’ என்ற தலைப்பில் சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம், சென்னை தி.நகரில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற வீட்டு வேலைத் தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.