பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை நாகலாந்து ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

4 hours ago 2

கோஹிமா: நாகலாந்து ஐஏஎஸ் அதிகாரி மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ரெனி வில்பிரட் (41). கேரளாவை சேர்ந்தவரான வில்பிரட் நாகலாந்து மாநில நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நாகலாந்து மகளிர் ஆணையம் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் நாகலாந்து போலீசார் வில்பிரட் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான பாலியல் புகார் குறித்த விசாரணை தொடங்குவதையடுத்து ரெனி வில்பிரட்டை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தலைமை செயலாளர் நேற்று உத்தரவிட்டார்.

The post பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை நாகலாந்து ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article