பெட்ரோல் குண்டு வீசும் கலாச்சாரத்தை தமிழக அரசு ஒடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

6 months ago 17

சென்னை: திருநெல்வேலி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு ஒடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மைதீன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவ்வழியாக வந்த மற்றொரு நபர் ஒருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

Read Entire Article