தர்மபுரி, ஜூன் 5: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் எஸ்பி மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்பத் aதகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 76 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, 76 மனுக்கள் மீதும் விசாரணை முடித்து வைக்கப்பட்டது. முகாமில் புதியதாக 38 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் டிஎஸ்பிக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
The post பெட்டிஷன் மேளாவில் 76 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.